விலைமாதுவின் மீது விலையில்லா காதல்

ஒரு கதைக்கு ஒரு தலைப்பு இருக்க வேண்டும் என்பதில்லை. இரண்டு தலைப்புகள் கூட இருக்கலாம். அது மாதிரி இந்த கதைக்கும் இரண்டு தலைப்புகள் “விலைமாதுவின் விலையில்லா காதல்” மற்றும் “விலைமாதுவின் மீது விலையில்லா காதல்”.

கவிதா நீண்ட நாட்களுக்கு நிம்மதியான ஒரு தூக்கம் தூங்கி எழுந்தியிருக்கிறாள். இத்தனை நாட்கள் அலுப்பினாலும், உடல் அசதியினாலும் சிறிது நேரம் தூங்கியிருந்தாலும் அது அவளுக்கு திருப்தியையோ அல்லது மன நிம்மதியை தரவில்லை.

மாறாக வெறுப்புடன் வாழ வேண்டிய ஒரு கட்டாயத்தில் ஓடிக் கொண்டிருந்த அவள் வாழ்க்கையில் வெறுப்பை, தன் கஷ்டத்தை விட்டு விலகி இருக்க தூக்கம் ஓர் ஆயுதம் அவளுக்கு. அதுவும் சில மணி நேரங்களுக்கு மட்டுமே. இதை எல்லாம் கண் முழுமையாக முழிக்காமல் யோசித்துக் கொண்டே தன் படுக்கையின் பக்கத்தில் கை வைத்து பார்த்தாள். அவளின் பக்கத்தில் நேற்று இரவு படுத்திருந்த அந்த ஆளை காணவில்லை.

அவள் முதலில் அந்த நபரை தான் தேடி பார்த்தாள். அவளிடம் இரவு முழுவதும் இருந்து சுகத்தை அனுபவித்து விட்டு பணம் குடுக்காமல் சென்றது கூட பெரிதாக நினைக்கவில்லை. ஏன்னென்றால் இது மாதிரி அவள் ஆரம்ப காலத்தில் நிறைய பார்த்திருக்கிறாள்.

ஆனால் அதற்கும் இதற்கும் வித்தியாசம் உண்டு. ஆரம்ப காலத்தில் நடந்தது ஒரு கற்பழிப்பு போன்றது தான். தன் இச்சை தீர்ந்தால் மட்டும் போதும் என்று சுயநலமாக நினைத்து தன் இச்சையை தீர்த்த அந்த பெண்ணை பற்றி கவலைபடாமல் ஏன் ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் பணம் எதுவும் குடுக்காமல் ஏளனமாக பார்த்து சிரித்து விட்டு சென்று விடுவார்கள் அந்த நெஞ்சமில்லா நெஞ்சங்கள்.

அவர்களை பொறுத்த வரை இலவசமாக காமத்தை அள்ளி தரும் ஒரு இயந்திரம் தான் பெண்கள்.

அந்த மாதிரியான நிகழ்வுக்கு பின் தன்னை தானே தைரியப்படுத்தி தன் குணநலன்களை மாற்றிக் கொண்டு எந்த ஒரு ஆணையும் மதிக்காமல் ஒரு அடி இடைவெளிவிட்டே பார்த்துக் கொண்டாள். பணம் வாங்கிய பிறகு அவளை தொடவிடுவாள்.

ஆனால் நேற்று வந்த நபர் அப்படி இல்லை. இதுவரை பார்த்த நபர்களில் மிகவும் வித்தியாசனவர். அதனால் காசை பற்றி கூட கவலைபடாமல் அந்த நபரை தேடி பார்க்கிறாள். அவள் வீடு முழுவதும் சுற்றி வந்து பார்த்தும் அந்த நபர் கிடைக்கவில்லை.

அவளுக்கு அது சிறிது வருத்தமாக இருந்தது. அவளின் முகத்தை கவனித்த தாய் “என்ன ஒரு மாதிரி இருக்க?” என்பதை கை சைகையில் மூலம் கேட்க, “நேத்து வந்தாரே அந்த ஆள் காணோம். நீ எதுவும் பாத்தியா?” பதிலுக்கு தாயிடம் கேட்டாள்.

“அவர் காலையிலே விடிஞ்சதும் போய்ட்டார். உன்ன அவர் படுத்திருந்த தலைகாணிக்கு அடியில இருக்குறத எடுத்துக்க சொல்லிட்டு போனார். நீ பாத்து எடுத்துக்கோ” என சைகையிலே சொல்லி புரிய வைத்தாள் கவிதாவின் தாய். கவிதாவின் மனதுக்குள் ஏற்கெனவே அவர் வந்திருந்தாலும் அவர் தனக்கான பணத்தை தான் வைத்துவிட்டு போய் இருப்பார். வேறு எதுவும் இருக்காது என்ற அலட்சிய போக்கில் இருந்தாள்.

கவிதா அன்றைக்கான வீட்டு வேலைகளில் ஈடுபட ஆரம்பித்தாள். தன் உடல் முடியாத தாய்க்கு பாலை கலந்து குடிக்க வைத்துவிட்டு பக்கத்து ரூமில் இருக்கும் தன் ஐந்து வயது மகனை எழுப்பி அவனுக்கும் பாலை கலந்து குடுத்து அன்றைக்கான காலை உணவை தயார் செய்து தன் தாய் மற்றும் மகனுக்கு குடுத்து முடிக்கவே மணி ஒன்பது தாண்டி இருந்தது. அவளும் காலை உணவை உட்கொண்டாள்.

நீண்ட நாட்களுக்கு பிறகு மனதில் ஏதோ ஒரு நிம்மதி கலந்த சந்தோஷத்துடன் உணவை உட்கொண்டாள். இதுவரை இருந்த அவளின் காயம்பட்ட நாட்களில் தாய் மற்றும் மகனுக்காக உயிர் வாழ்ந்து ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் ஏதோ மனம் ஒப்பாமல் வயிற்றை காயவிடக் கூடாது என்ற காரணத்திற்க்காவே சாப்பிட்டாள். சில சமயம் அதுக்கு கூட நேரம் இருக்காது. ஏன்னென்றால் அவள் செய்யும் தொழில் அப்படிபட்டது.

அவள் சாப்பிட்டு முடித்த பிறகு பாத்திரங்களை எடுத்து கழுவ போட்டு விட்டு தன் துணிமணிகளை எடுத்துக் கொண்டு குளிக்க தயாரானாள். தன் உடலில் இருந்த ஆடை அனைத்தையும் உடலை விட்டு நீக்கி நீண்ட காலத்திற்கு பிறகு தன் உடலை தானே தடவி பார்த்து பெருமிதம் பட்டுக் கொண்டாள். அதற்கான காரணங்கள் இரண்டு.

ஒன்று நேற்று வந்த நபரின் கை மற்ற நபர்களை போல் காட்டுமிராண்டி தனம் காட்டாமல் இவளின் உடலில் பட்டு வெறும் சுகத்தை மட்டும் தந்தது. அது மட்டுமில்லாமல் அவனை தன் மனதில் மனதார நினைக்கவும் ஆரம்பித்து இருந்தாள் கவிதா. அதுவும் அவன் வந்த சில நிமிடங்களிலே இவளின் மனதிற்குள் புகுந்து ஆழமாக பதிந்துவிட்டான்.

மற்றொன்று இதுவரை தன்னிடம் வந்து சுகத்தை அனுபவித்த ஆண்கள் ஏராளம்.! ஏராளம்.!! அவர்களுக்கு இவள் சுகத்தை வழங்கினாலா என்று பார்த்தால் மனது அறிந்து இல்லை என்ற பதில் வந்து நிற்கும். அவர்கள் தான் இவளின் மூலம் தன் உடல் இச்சைகளை தீர்த்துக் கொண்டார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.

அதற்கு இவள் ஒரு கருவியாக இருந்து இருக்கிறாள் என்பதே நிச்சியமான உண்மை. ஆனால் நேற்று வந்த நபருக்கு அவள் முழு மனதோடு தன் சில ஆண்டு கால அனுபவத்தை எல்லாம் திரட்டி சுகத்தை வாரி வழங்கி இருக்கிறாள். இவனோடு தான் முதன் முதலாக தன் படுக்கையை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டாள் ஒரு காதலனிடன் அல்லது கணவனிடம் பகிர்வுவது போல்.

அவனின் கைகள் விளையாடிய அந்த உடலை தொட்டு பார்த்து மூச்சை இழுத்து மனம் மகிழ்ந்தாள். அவனை நினைத்தாலே தன் உடல் முறுக்கேறி மார்ப்புக்காம்புகள் விடைத்து நீட்டிக் கொண்டிருந்தது. அதை தன் கையால் தொட்டு தடவி பார்த்த போது அவள் உடல் சிலிர்த்தது. அது மட்டுமில்லாமல் அவளின் பெண்மை மதனநீரை கசிய செய்திருந்தது. நீண்ட வருடங்களுக்கு பிறகு ஒரு ஆணை மனதில் நினைத்ததால் அவளின் பெண்மை கசிந்திருக்கிறது. பல ஆண்களுடன் படுக்கையை பகிரும் போது கசிந்திருக்கிறது.

அது எல்லாம் ஒரு ஆண் தன் இச்சையை போக்கி கொள்ள, இவளின் உணர்ச்சியை, உரிமையோ, அனுமதியோ இல்லாமல் தூண்டபட்டதன் விளைவாக ஏற்பட்ட ஒரு மனமில்லா வெளிப்பாடு தான். ஆனால் இது அப்படி இல்லை. அவளின் மனது ஒத்து நடந்த சுகமான வெளிப்பாடு.

அவனின் சுகமான நினைவுகளோடு குளித்து முடித்து வெளியே வந்து தன்னை கண்ணாடி முன்னால் நின்று பெருமிதமாக பார்த்து தனக்குள்ளே சிரித்துக் கொண்டாள். நீண்ட நாட்களுக்கு பிறகு அவளின் மனதில் இருந்து வந்த சிரிப்பு. அதற்கும் அந்த நபர் தான் காரணம். ஓர் இரவு தன்னுடன் இருந்ததற்கே இவ்வளவு மாற்றங்களா என வியந்தாள்.

அவனுடனே தன்னை அழைத்து செல்லமாட்டானா அல்லது அடுத்து எப்போது தன்னை தேடி வருவான் என ஒரு ஏக்கம் அவளின் மனதில் உருவானது. அவனுடனே செல்வது நடக்காது என்று அவளுக்கு நிச்சயம் தெரிந்த ஒன்று தான். ஆனால் அவன் திரும்பி வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

அவன் தன்னை தேடி வருவானா? நம்மிடம் அவனுக்கு தேவையான சுகம் கிடைத்திருந்தால் கண்டிப்பாக தானே வருவான் என மனதில் நினைத்துக் கொண்டே உடலில் ஆடையை உடுத்தினாள். அவளின் அம்மா இருமல் சத்தம் கேட்டு நினைவு உலகத்தில் இருந்து நிஜ உலகத்திற்கு வந்தாள்.

கவிதா வேகமாக உடையை சரிசெய்து கொண்டு இருமிய தன் தாயின் நெஞ்சை தடவி அவளுக்கு தண்ணீர் குடுத்து இதயதுடிப்பை சீராக்கி விட்டு மணியை பார்த்தாள்.

அவள் குளிக்க சென்று நீண்ட நேரம் கடந்திருந்தது. இன்னும் அவள் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருந்தன. அதை எல்லாம் ஒவ்வென்றாக எப்படி முடிக்க வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டு அதற்கேற்றாற் போல் மீண்டும் தன் வீட்டு வேலையை செய்ய ஆரம்பித்தாள்.

சின்ன சின்ன வீட்டு வேலைகளை பார்த்துக் கொண்டே மதிய உணவையும் மிகவும் எளிமையாக ஒரு பக்கம் ரெடி பண்ணினாள். அவ்வளவு தொடர் வேலைகளுக்கு மத்தியிலும் அவ்வப்போது அவனின் முகமும், அவனுடன் இருந்த அந்த நினைவுகளும் வந்து செல்ல தவறவில்லை. இடையிடையே வந்த அவனின் நினைவுகளுடனே வீட்டு வேலைகளையும் சமையல் வேலைகளையும் முடித்தாள் கவிதா.

வீட்டு வேலையோடு சமையல் வேலையையும் முடித்து மணியை பார்த்தாள். அவள் அம்மா சாப்பிடும் நேரத்தை எட்டுவதற்கு இன்னும் சில நிமிடங்கள் தான் இருந்தன.

அந்த சிறு இடைவெளியில் ஃபேனுக்கு அடியில் உட்காந்து அவனை பற்றி மீண்டும் நினைக்க ஆரம்பித்து கொஞ்சம் சிந்திக்க ஆரம்பித்தாள். அந்த நினைவு சிந்தனையில் மூழ்கி அந்த சில நிமிடங்கள் மிக வேகமாக கடந்து போய் இருந்தன. அவளின் அம்மா மீண்டும் இருமிய போது அவளின் சிந்தனை உலகில் இருந்து வெளியே வந்து மணியை பார்த்து விட்டு ஓடினாள்.

அவள் அம்மாவிற்கு சாப்பாட்டை போட்டு அவளுக்கான அரைத்த மல்லி துவையலை வைத்து குடுத்துவிட்டு தன் மகனுக்கு சாப்பாட்டை குடுத்து தானும் சாப்பாட்டை சாப்பிட உட்காந்தாள். முதல் முறையாக ஒரு ஆணை நினைத்து அவனின் மன நிறைவால் சாப்பாடு செல்ல மறுக்கிறது. இதற்கு முன் சாப்பாடு செல்லாமல் இருந்திருக்கிறது.

ஆனால் அதெல்லாம் அவளின் மனதை பாதித்த வன் கொடுமைகளால் நடந்தது. இது இவளின் மனம் ஒத்த மென் கொடுமைகளால் நடக்கிறது. அது அவளுக்கு பிடித்திருக்கிறது. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ஒரு ஆண் அவளின் மனதில் இடம் பிடித்து ஆட்கொண்டிருக்கிறான்.

சாப்பிட மனம் இல்லாமல் அதை எடுத்து வைத்துவிட்டு அவளின் ரூம்க்குள் நேற்று நடந்ததை மீண்டும் நினைக்க ஆரம்பித்தாள். அந்த நபரை எப்போதும் பார்ட்டியை கூப்பிட்டு வரும் ராஜன் தான் இவரையும் கூப்பிட்டு வந்தான். வீட்டு வாசலில் நின்று கவிதா கவிதா என ஓலமிட்டான். இவளும் எரிச்சலோடு உள்ளிருந்தே எட்டி பார்த்து என்ன கேட்டாள்.

“இல்ல ஒரு பார்ட்டி வந்திருக்கு. அதான் கூட்டியாந்தேன். உன்ன பத்தி தெரிஞ்சு நீ தான் வேணும்” கேட்டார்.

அவள் மனதில் “இவன் ஒரு துட்டு அரிப்பெடுத்த பய. டெய்லி காசு வேணும் அரிப்பெடுத்து போய் எவனையாவது கூட்டிட்டு வந்து அனத்திட்டு இருப்பான்” என நினைத்தாள்.

இருவரையும் உள்ள வர சொன்னாள். அவள் அம்மாவிற்கு சாப்பாடு குடுத்திட்டு இருந்தாள். உள்ள வந்த நபரை மேல் இருந்து கீழ் வரை நோட்டமிட்டாள். எந்த பிரச்சினையும் செய்யமாட்டான் என அவளுக்கு தோன்றியது. ராஜன் தலை சொறிந்துக் கொண்டே அவளை பார்த்தான்.

இவளுக்கு புரிந்துவிட்டது காசுக்காக தலையை சொறிந்துக் கொண்டு இருக்கிறான் என்று. அவள் அம்மாவுக்கு குடுத்திட்டு இருந்த சாப்பாட்டை கீழே வைத்துவிட்டு உள்ளே போய் அவனின் கமிஷனை குடுத்து அனுப்பிவிட்டாள். அவனை பார்க்கும் போது அமைதியான ஆள் தெரிந்ததால் அவனிடம் தயங்கி தயங்கி “கொஞ்சம் வெயிட் பண்ண முடியுமா? ” என கேட்டாள்.

“உனக்காக எல்லாம் வெயிட் பண்ணிட்டு இருக்க முடியாது. அதுக்காக நான் காச தூக்கிட்டு நீ இருக்கற இடத்த தேடி வந்திருக்கேன். காசு குடுக்குற நா உனக்காக காத்திட்டு இருக்கனுமா?” ஏன் அதை விட கேவலமாக சொல்பவர்களுக்கு மத்தியில் “நா வெயிட் பண்றேன். நீங்க உங்க வேலையை எல்லாம் முடிச்சிட்டு வந்தா போதும்.

காலைல தான் இங்கிருந்து கிழம்புவேன்” என்றான். அவன் அப்படி சொன்னதே கேட்டு அவளுக்கு ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி. அதுவும் அவளை மிகவும் மரியாதை குடுத்து பேசினது இன்னும் ஆச்சரியம். அந்த சந்தோஷத்திலே வேலையை சீக்கிரமாக முடித்துவிட்டு அவனிடம் வந்து “எந்த டிரஸ் போட” என கேட்டாள்.

“உங்களுக்கு எந்த டிரஸ் போட்டாலும் நல்லாதான் இருக்கும். சேலை கட்டுனா இன்னும் நல்லா இருக்கும்” என்றான்.

அவனை ரூமில் இருக்க சொல்லிட்டு வேகமாக குளித்து விட்டு வந்து அவன் முன்னாலே சேலை கட்டி தன்னை அழகுப்படுத்தி அவனிடமே “நல்லா இருக்கேனா. உங்களுக்கு பிடிச்சிருக்கா?” என கேட்டாள். கையை சூப்பர் என காட்டி பதிலளித்தாள்.

அவன் நடத்தையால் அவளின் மனதை அவனிடம் பறிகொடுக்க ஆரம்பித்தாள். ஒரு நிமிடம் அவனை இருக்க சொல்லி விட்டு முன்னால் சென்று கதவை பூட்டி எல்லா ஜன்னலையும் அடைத்துவிட்டு தன் அம்மாவையும் மகனையும் ஒரு முறை பார்த்துவிட்டு இவனிடம் வந்து என்ன குடிக்கிறீங்க? கேட்டாள்.

அவளை ஒரு மாதிரியாக பார்த்தான். இங்க எல்லாமே இருக்கு. பீர்,விஸ்கி, பிராந்தி, ஒயின், வோட்கா எல்லாம் இருக்கு. எல்லா பிராண்ட் சிகரெட் இருக்கு சொல்ல அவன் சிரித்துவிட்டான். சிரித்துக் கொண்டே எனக்கு இதலாம் வேண்டாம். ப்ளாக் டீ கிடைக்குமா? கேட்டான்.

அவனை ஆச்சரியமாக பார்த்து ஐந்து நிமிஷம் இருங்க. இதோ போட்டு எடுத்திட்டு வரேன் சொல்லிவிட்டு டீ தூளை நீரால் கொதிக்க விட்டு சிறிது எலுமிச்சை சாறை பிழிந்து அவனுக்காக லெமன் டீயே போட்டு கொண்டு வந்து குடுத்தாள். அவனிடம் மனதை பறி கொடுக்க ஆரம்பித்தால் அவன் செய்யும் ஒவ்வொன்றையும், அவனையும் ரசிக்க ஆரம்பித்தாள்.

இருவரும் சிறிது நேரம் பேசினர். அவளிடம் வருபவர்களை போல் இல்லாமல் இவனின் பேச்சு சற்று வித்தியாசமாக இருந்தது. நன்றாகவும் இருந்தது. பின் அவளே தான் கேட்டாள். ஆரம்பிக்கலாமா.? ம் என தலை அசைக்க அவளின் சேலையை கலட்டி அவனின் பக்கத்தில் படுத்தாள். இருவரின் கண்களில் காமத்தை விட காதல் தான் இருந்தது.

காதல் வெளிப்பாடாக காமம் இருந்ததனால் இருவரின் உடலும் மென்மையாக உரசி உணர்ச்சியை ஏற்படுத்தின. இருவரின் உதடுகளும் ஒன்றோடு ஒன்று சங்கமித்து உடைகள் எல்லாம் அவர்களை இடையூறு இல்லாமல் தனி தனியாக பிரிந்து சென்றன.

உதடுகள் சங்கமித்தது போன்று உடல்களும் ஒன்றாக சங்கமிக்க ஆரம்பித்தன. அவளை புணர ஆரம்பிக்கும் போது தான் அவனின் ஒரு உள்ளங்கையில் ஆழமாக அடிபட்ட தழும்பை பார்க்கிறாள். அவனால் படுக்கையில் கையை ஊன்றி அவளை சரிவர புணர முடியவில்லை. கையை கீழே ஊன்றினால் அவனின் கையில் இருந்த தழும்பு வலியை குடுத்தது.

அதை புரிந்துக் கொண்ட அவள், கீழே படுக்க சொல்லிவிட்டு அவனின் காலுக்கு இடையில் வந்தாள். பாதி விறைப்படைந்தது நிலையில் இருந்த ஆணுறுப்பை முழு விறைப்பாக்கி தன் வாயை அதற்கு அருகில் கொண்டு சென்றாள்.

அவளை பார்த்து “உங்களுக்கு இது செய்ய பிடிக்குமா? ” கேட்டான். இதுவரை வந்த ஆண்கள் எவரும் இவளிடம், உனக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டதில்லை. குடுக்கும் காசுக்கு அவர்களை சொல்வதை பிடித்தாலும் பிடிக்கவில்லை என்றாலும் செய்தாக வேண்டும். இவன் இப்படி கேட்டது அவளை மனதை இன்னும் கரைய செய்து அவனின் மீதிருந்த மதிப்பையும் காதலையும் அதிகரிக்க செய்தது.

அவனை பார்த்து எல்லாமே பிடிச்சிருக்கு அதான் பண்றேன் சொல்லிவிட்டு ஆணுறுப்பை வாயில் கவ்வி அவனுக்கு சுகத்தை குடுத்து முதன் முதலாக தானும் சுகத்தை முழுமனதுடன் அனுபவிக்கிறாள். சில நிமிடங்களுக்கு பின் அவளே, அவனை புணர்ந்து அவனுக்கு முழு சுகத்தையையும் வழங்கினாள். எல்லாம் முடிந்த பிறகு அவன் மீதே சிறிது நேரம் படுத்திருந்து அவனின் இதயதுடிப்பை கேட்டு ரசித்தாள்.

பின் அவனை விட்டு இறங்கி தன்னை சுத்தபடுத்திக் கொண்டு அவனையும் சுத்தபடுத்தி அவனின் நெஞ்சுக்கூட்டுக்குள் தலை வைத்து நிம்மதியாக கண் அசந்தாள். அவளின் கை எதேர்ச்சியாக அவன் படுத்திருந்த தலகாணி மீது பட்டது. அப்போது தான் அவள் அம்மா சொன்னது நியாபகம் வந்து தலகாணி தூக்கி பார்த்தாள்.

அங்கே ஒரு மஞ்சப்பை இருந்தது. அதை எடுத்து பார்த்தாள். அதில் ஒரு லெட்டரும் இரு பணகட்டுகளும் இருந்தது. பணத்தை விட்டுவிட்டு லெட்டரை எடுத்து படிக்க ஆரம்பித்ததும் அவளின் கண் கலங்க ஆரம்பித்தது. இறுதியில் இருந்த பெயரை பார்த்ததும் இன்னும் அதிர்ச்சியனாள்.

“விலைமாதுவின் உடலுக்கு தான் விலையுண்டு. மனதிற்கு இல்லை.”

அன்றும் இன்றும் என்றும் காமத்தை ரசிக்கும் முகிலா.

கருத்துகளுக்கு [email protected]